செவ்வாய், 8 நவம்பர், 2011

ஐந்தறிவு கொண்ட புலிக்கும் பாசம் உண்டு


அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” இது எத்துணை உண்மையானது என்பதனை பல சந்தர்பங்களில் புரிந்திருக்கிறோம்.அன்பு என்பது ஆறரிவு கொண்ட மனித வர்க்கத்திற்கு மட்டும் சொந்தமில்லை. ஐந்தறிவு கொண்ட எங்களுக்கும் அன்பு காட்டத் தெரியும் என காட்டி இருக்கிறது இந்த புலி.அன்புக்கு முன் உயிர்களினை காவு கொள்ளும் புலி கூட பூனையாகி விட்டது.குழந்தையும், புலியும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவ முயல்கின்றனர். ஆனால் குறுக்கே கண்ணாடி இருப்பதால் தங்கள் மனதுக்குள் உணர்வை பகிர்ந்து கொள்கின்றனர்.இரண்டு வயது தாண்டாத இந்த குழந்தை மிருகக்காட்சி சாலைக்கு தன் பெற்றோருடன் சென்ற போது அங்கிருந்த புலியைப்பார்த்து அந்த இடத்திலேயே நின்று விட்டதாம்.புலியும் குழந்தை அருகே படுத்தே விட்டதாம். ஒருவேளை முன்ஜென்ம உறவாகக் கூட இருக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக